- பாலைவனத்தின் பன்னீர் பூக்கள் – 17
அத்தியாயம் -17
அத்தியாயம் -17
மாலினியோ ஜீவாவிடம் பேசி கொண்டு இருக்க அவனோ கண்களாலே ஜமுனாவை மனதில் நிரப்பி கொண்டிருந்தான். பார்த்த முகம் தான் என்றாலும் ஏனோ மனதில் காதல் வந்த பிறகு அவளின் சிறு அசைவும் அவனுக்கு புதிதாக தோன்றியது. தோழிகள் இருவரும் சென்ற பிறகு அவள் முகத்தை சுளித்தபடி சுற்றும் பார்த்தவள் பின்னர் ஏதோ முனுமுனுத்தபடி அருகில் இருக்கும் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்த வரை அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது மாலினியின் வகுப்பு தோழி வர அவளிடம் பேசியபடி அவள் சற்று தூரம் தள்ளி போக அவனது கவனம் முழுவதும் ஜமுனாவே நோக்கியே இருந்தது. அப்போதுதான் அவனின் பக்கம் திரும்பினாள் அவள்
இரு விழிகள் கலக்க அப்போது அவனின் விழிகள் சொல்லும் செய்தி புரியாமல் அவள் மிரண்டு விழிக்க ….அவளின் தடுமாற்றத்தை சிறிது நேரம் ரசித்தவன் பின்னர் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்கவும் ……..அந்த செயலில் அவளின் முகம் சிவக்க …பின்னர் அவனின் பார்வை வீச்சு தாங்காமல் அவள் இமைகள் தரை நோக்க…….சில நொடிகளில் அவளுக்குள் நடந்த மாற்றத்தை கண்டு கொண்ட அவன் மனம் உற்சாகத்தில் துள்ளி குதித்தது.
..
உடனே அவள் அருகில் வந்தவன் நாற்காலியை இழுத்து போட்டு நெருங்கி அமரவும் ஜமுனாவோ அங்கிருந்து வேகமாக எழ முயற்ச்சிக்க அதில் கால்கள் தடுமாற .
“ஹே பார்த்து பார்த்து…” என அவள் கைகளை பிடித்து நேராக நிறுத்தியவன் … “இப்போ எதுக்கு இப்படி அவசரமா எழுந்த…கீழ விழுந்திருந்தா என்னாகிறது” என சொல்லவும்
“இல்லை அது வந்து வந்து …எனக்கு கொஞ்சம்…” என வார்த்தை தடுமாற அந்த நிலையிலும் அவன் கைளில் இருந்து தனது கையை விடுவிக்க முயற்சித்தாள்.
“ரிலாக்ஸ் ஜானு….இப்போ என்னாச்சு…ஏன் உனக்கு இப்படி வேர்க்குது…முதல்ல உட்கார்”….என அவளை அதே நாற்காலியில் அமரவைத்தவன் அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க .
ஆனால் அவளோ அதை வாங்காமல் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டு இருந்தது.
அதை கண்டதும் அவன் பதட்டத்துடன் என்னாச்சுமா ? எதுக்கு இப்போ அழுகிற…. ஏதாவது அடிபட்டுடுச்சா?,,” என கேட்க
அதற்குள் “ஹே ஜம்மு உனக்கும் சேர்த்து தான் சமோசா வாங்கிட்டு வந்திருக்கேன்” என சொல்லிகொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்த மாலினி அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும்
“என்னாச்சு மாலினி” என பதறியவள் அருகில் ஜீவா நிற்பதை பார்த்ததும் இவன் தான் ஏதோ பேசி இருக்கிறான் என நினைத்து “என்ன ஜீவா நீங்க…..உங்ககிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்…ஜம்மு மனசு கஷ்டப்டற மாதிரி ஏதும் பேசாதீங்கன்னு …..ஏன் இப்படி பண்றீங்க?…நீங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க…” என சொல்ல
“இல்லை மாலினி நான் ஏதும்…” என ஆரம்பித்தவன் ஜம்முவின் முகத்தை பார்க்க அவளின் பார்வையோ வேறு பக்கம் இருக்க பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
ஜெஸியின் ஊடல் புதிதல்ல என்றாலும் ஏனோ இன்று அவளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்க அவளை விடாமல் துரத்தி கொண்டே பின்னால் சென்றான் நந்து.
“ஹே ஜெசி உன் நந்து மாமா பாவம்ல….கொஞ்சம் என்னை பாரேன்…என் கூட பேசு…..நான் செஞ்சது தப்புனா நீ செஞ்சதும் தப்புதானே” …..என அவனை நியாயபடுத்திகொள்ள அவன் பேச
திரும்பி அவனை பார்த்து முறைத்தவள் பின்னர் முகத்தை திருப்பி கொண்டு நடந்தாள்.
சட்டென்று அவள் கைகளை பிடித்து இழுத்து கொண்டு அருகில் இருக்கும் மரத்தின் பின்புறம் சென்றவன் அவளை மரத்தோடு சாய்த்து இருபுறமும் கைகளை கொடுத்து அவளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். அவனது இந்த செயலில் அதிர்ந்த ஜெசி “டேய் லூசு என்னடா பண்ற…” என கத்த
அவனோ அதை கண்டு கொள்ளாமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
சில நொடிகள் அங்கு அமைதி நிலவ
அவன் பார்வைக்கு எதிர்பாரவை பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் பின்னர் மெதுவாக “இப்போ என்ன வேணும் உனக்கு” என வாய்க்குள் முனகினாள்.
“இப்போ எதுக்கு முனகற… நான் தான் எதா இருந்தாலும் பேசி தீர்த்துகலாம்னு சொல்றேன்ல” என அவன் கொஞ்சம் அதட்டும் குரலில் சொல்லவும்
“போடா …நீதான என்கிட்டே பேசாம போன…என்னை பார்த்து பார்த்து முறைச்சுகிட்டு இருந்த….இப்போ மட்டும் எதுக்கு வந்து பேசற” என அவள் கோபபட
“ஏய் நீ பண்ண காரியத்துக்கு உன்னை அடிச்சு துவச்சிருக்கணும்…..ஏதோ போனா போகுதுன்னு உன்கிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன்…..உன் தோழி சொன்னானா உனக்கு புத்தி எங்க போச்சு….உங்கிட்ட எத்தனை முறை ஏதாவது பிரச்சனையான்னு கேட்டு இருப்பேன்….ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லலை நீ …….இப்போ வந்து என்னையே குறை சொல்றியா” என அவனும் பதிலுக்கு கோபபட ….
அவனது கோபத்தில் உள்ள நியாயம் புரிந்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “எனக்கு வேற வழி தெரியலை நந்து….மாலினி எனக்கு தோழி ….அவளோட பெர்சனல நான் எப்படி வெளிய சொல்ல முடியும்” என சொல்லும்போதே என்னை நம்பு என அவள் கணகள் இறைஞ்சி நிற்க
ஹே என்ன இது என அவளை இழுத்து தன் தோளோடு அனைத்து கொண்டவன் “எனக்கும் புரிது ஜெசி…ஆனா மாலினி விஷயம் எவ்ளோ சிக்கலானது தெரியுமா? அதில உனக்கு ஏதாவது பிரச்சனை வந்திருந்தா என்னால அதை நினைச்சு கூட பார்க்க முடியல” என சொல்லும்போதே அவன் குரலில் ஒரு நடுக்கம் தெரிய
“ம்ம் இப்போதான் புரியுது நந்து…..மாலினி எல்லா விஷியமும் சொன்னா…அவன் இவ்ளோ பெரிய தில்லாலங்கடியா இருப்பான்னு எங்களுக்கு தெரியலை. இனி இந்த மாதிரி ஏதும் நடக்காது..ஆனா நீயும் இப்படி என்மேல கோவிச்சுகிட்டு பேசாம இருக்காத …என்னால முடியலடா…. நீ பேசாம இருந்தப்ப அழுகை அழுகையா வந்தது தெரியுமா ?” என அவள் சிறுபிள்ளை
போல் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“ஹே இது என்ன ஜெசியோட புது அவதாரம் போல….நீ மத்தவங்கள அழுக வச்சுதான் பார்த்திருக்கேன்….நோ நோ என் ஜெசி எப்பொதும் சிரிச்சுகிட்டே தான் இருக்கணும்….இப்படி எல்லாம் அழகூடாது….நீ என் உயிர் ஜெசி….உன்னை விட்டு நான் எங்க போக முடியும் என்றவன்.உன்னை சிரிக்க வைக்க நான் இப்போ ஒரு கவிதை சொல்லட்டுமா…” என பேச்சை மாற்ற
என்னது கவிதையா என அவனிடம் இருந்து விலகி சற்று தள்ளி நின்றவள் “வேண்டாம் நந்து வேண்டாம்….நீ அன்னைக்கு சொன்ன கவிதையில என் காதில வந்த ரத்தம் இப்போ தான் நின்னுச்சு ..மறுபடியுமா” என அதிர்ந்தவள்
அதற்குள்
என் விழிவழியே இதயம் நுழைந்தவளே
உயிர் வரை ஊடுருவி உந்தன்
பிம்பம் என்னில் கரைந்திட
உன்னை அறிந்து கொள்ள
வார்த்தைகள் தேவையா?
என் முகம் கண்டதும் உன்
முகத்தில் தோன்றும் ஒளியில்
அந்த வெண்ணிலவும் வெட்கம்
கொண்டு மறைந்து கொள்ளுமே!
.
அவனின் மனதை கவிதையாக சொல்ல கேட்டவளின் மனம் அவனது காதலில் கரைந்து முகத்தில் இவன் என்னவன் என்ற பெருமிதத்தோடு ஓடி சென்று அவனை இறுக அணைத்து கொண்டாள்.
“ஏய் மாலினி எவ்ளோ நேரமா கத்திகிட்டு இருக்கேன்….இப்போ சாப்பிட வர போறியா இல்லையா..எப்போ பார்த்தாலும் அந்த போனை நோன்டிகிட்டே இருக்க வேண்டியது….என்னதான் இருக்கோ அதுல” என்ற அன்னையின் குரல் அவள் காதில் விழுந்தாலும் அதை உணரும் நிலையில் அவள் இல்லை.
ஆம் அவள் இந்த உலகிலே இல்லை…இப்போது அவளின் நினைவில் அவன் மட்டுமே நிறைந்திருந்தான். இந்த புதிய அனுபவம் அவளுக்கு பிடித்து இருந்தது. தனது அறையில் மெத்தையில் படுத்துக்கொண்டு அவன் நினைவுகளை அசைபோடுவதில் ஒரு அலாதி சுகம் இருப்பதை அப்போது தான் அவள் உணர்ந்தாள்.
அதற்குள் அவள் அன்னை மேலே வந்து அவளை திட்டி சாப்பிட அழைத்து செல்ல அவள் எப்படி நடந்து சென்றாள்..என்ன உணவு உண்டால் என்பது அவளுக்கு தெரியாது. தன் மனதை அறிந்ததில் இருந்து அவள் கனவிலே மிதந்து கொண்டிருந்தாள்.
இரவு நேரத்தில் மெல்லிய விளக்கு ஒளியில் இரவு உடையில் கண்ணாடி முன் நின்றவள் ஏனோ இன்று தான் மிக அழகாக இருப்பது போல தோன்ற ,அதற்கு காரணமானவனை நினைக்கும்போது முகத்தில் வெட்கமும் ,காதலும் போட்டி போட மனமோ சொல்ல முடியாத சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே தனக்கு கஷ்டம் வரும் போது எல்லாம் அவன் தான் உதவி செய்து இருக்கிறான் .. படிப்பு விஷியத்தில் இருந்து இந்த சதீஷ் விஷயம் வரை அவன் தான் தீர்த்து வைத்திருக்கிறான். இவன் வாழக்கை முழுவதும் உடன் வந்தால் எனக்கு எந்த துன்பமும் இல்லை… நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என அவள் மனதில் கற்பனைகள் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.
அப்போது திடீரென “அவனை காதலிக்கும் நீ அதிர்ஷ்ட்காரிதான். ஆனால் அந்த அதிர்ஷ்டம் அவனுக்கு இருக்குமா? உனது பழைய வாழ்க்கையை மறந்து விட்டாயா? பணத்தில்,அழகில் உயர்ந்து இருந்தாலும் சதீஷ் விஷியத்தில் நீ எந்த அளவு தரம் இறங்கி இருந்தாய் என்பதை மறந்து விடாதே…உன்னை எப்படி ஏற்பான் அவன்” என அபஸ்வரமாக மனதில் ஒரு எண்ணம் தோன்ற
அதுவரை இருந்த உணர்வுகள் எல்லாம் நொடிபொழுதில் மறைந்திட விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்தவள் முகம் எல்லாம் வேர்த்து இருக்க அவள் மனம் கேட்ட கேள்வியை அவளாலே ஜீரனிக்க முடியவில்லை. ஆனால் அதானே உண்மை என மீண்டும் அவள் மனசாட்சி கேட்க அப்போது தான் நிதர்சனம் அவளுக்கு புரிந்தது.
அப்போ ஜீவாவை காதலிக்கும் தகுதி எனக்கு இல்லையா? அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? என நினைக்கும்போதே அவளின் உடல் அதிர்ச்சியில் குலுங்க
இல்லை, இல்லை அப்படி ஏதும் இல்லை. ஜீவா மிகவும் நல்லவர் …என்னை புரிந்து கொள்வார்…என்னை ஏற்று கொள்வார் என அவள் தன் மனதோடு வாதாட
ஆனால் உனக்கு மனசாட்சி இருக்கிறதல்லவா ? நீ தானே சொல்கிறாய் உன்னோட ஒவ்வொரு கஷ்டத்திலும் அவன்தான் உதவிக்கு வருகிறான் என்று….அவனுக்கு நீ செய்யும் நன்றி கடன் இது தானா? என தொடர்ந்து மனதில் கேள்வி எழ
எந்த ஒரு செயலும் தடுக்கப்படும்போதும் , மறுக்கப்படும்போதும் தான் அதன் வேகம் அதிகம் இருக்கும். மாலினியின் காதல் கொண்ட மனமும் அதில் தப்புமா என்ன ? அவளின் காதலை அவள் மனமே மறுக்க அவளோ அவனில் தன்னை நிரப்பி அவனின் காதலை வென்று விட முடிவு செய்து விட்டாள்.
.எனக்குள் நீ என உணர்ந்த
நொடியில்கற்பனைகள் கரை புரள
நிதர்சனமோ என்னை மிரட்ட
அஞ்சிடுமா காதல் மனம்!
எனது வரையறை இல்லா காதலில்
உன்னில் என்னை நிரப்பிட
காதல் யாகத்தை
தொடங்கிவிட்டேனடா!
கல்லூரி கேண்டீனில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தான் நந்து. மச்சான் வர வர நம்ம ஹச் ஒ டி தொல்லை தாங்க முடியலடா….பைனல் இயர்னு ரொம்ப பூச்சாண்டி காட்றான்….கிளாஸ் டைம்ல பாத்ரூம் போக கூட விட மாட்டேன்கிறார்…..ப்ராக்டிகல் மார்க்கல கை வச்சிடுவேணு மிரட்றார்டா” என ஒருவன் புலம்ப
“உனக்காவது பரவாயில்லை மாமு ….அந்த குண்டு பூசணிக்காய் பிசிக்ஸ் லெக்சர் என்னை பார்த்து இப்படி முட்டை மார்க் எடுத்து வைச்சிருக்க…உன்னை எல்லாம் எந்த பொண்ணு திரும்பி பார்ப்பா…உனக்கு கல்யாணமே ஆகாதுன்னு சாபம் விடுதுடா ” என மற்றொருவன் தன் சோக கதைய சொல்ல
“ஏண்டா கல்யாணத்துக்கும் பிசிகிஸ்க்கும் என்னடா சம்பந்தம்” என அருகில் இருப்பவன் சந்தேகமாக கேட்கவும்
“அதாண்டா எனக்கும் புரியலை…கெமிஸ்ட்ரி மிஸ் சொல்லிருந்தாலும் ஓகே…கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகாதுன்னு சொல்லலாம் ….ஆனா பிசிக்ஸ் மிஸ் சொல்லுதுடா” என மீண்டும் அவன் புலம்ப
“மச்சி அப்போ பிசிகிஸ்க்கும் மேரஜ்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ …. டேய் கூப்பிட்றா நம்ப பசங்கள…..இதை பத்தி உடனே தெரிஞ்சாகனும்” என துள்ளவும்
“டேய் அப்போ எனக்கு கல்யாணமே ஆகாதாடா” என அந்த மாணவன்பு மீண்டும் புலம்ப
மற்றொரு நண்பனோ “விடு மச்சி இந்த இயர் ப்ராஜெக்ட்டா இதை எடுத்துகலாம்…மேரஜ்க்கு பிஸிக்ஸ் முக்கியமா கெமிஸ்ட்ரி முக்கியமான்னு என்றவன் அருகில் இருக்கும் நந்துவை பார்த்து ஏண்டா இத பத்தி என்ன நினைக்கிற ?” என கேட்க
“டேய் கடுப்பேத்தாதீங்க…நானே இங்க ஒரு சாமியாரா இருந்தவன் எப்படி சன்னிலியோனி ரசிகனா மாறினான்னு தெரியாம குழம்பிட்டு இருக்கேன்…இவனுக வேற என சொல்லிமுடிக்கவும்” அப்போது ஜீவா அங்கு வரவும் சரியாக இருந்தது.
“மச்சான் உன்னை எங்க எல்லாம் தேடறது? இன்னைக்கு மதியம் கிளாஸ் இல்லை…..ஏதாவது படத்துக்கு போலாமா?” என அவன் கேட்கவும்
“என்னது படத்துக்காஆஆ!!!!! ….. என சுற்றி உள்ள நண்பர்கள் அதிர
“டேய் இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி? இன்னும் இருக்குடா” என மனதில் நினைத்த நந்து
“எந்த படத்துக்கு போலாம் மச்சான்” என கேட்கவும்
“ஹர ஹர மகாதேவினு ஒரு படம் வந்திருக்காம். அதுக்கு போலாம் மச்சான்” என சொல்லி முடிக்கும் முன்
அருகில் இருப்பவன் “என்னதுஊஊஉ அந்த படத்துக்காஆஆ …அதும் நீ போறீயா? டேய் எனக்கு மயக்கம் வருதுடா “ என தலையை பிடித்து அமர
நந்துவோ “மச்சான் எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்…இங்க பாரு ஏற்கனவே பயபுள்ள பிசிக்ஸ்ல வீக்காகி கெமிஸ்ட்ரில குழம்பி போய் கிடக்கு…இதுக்கு மேலயும் அதிர்ச்சி தாங்காது” என்றவன் ..
நண்பர்களிடம் இருந்து அவனை பிரித்து அழைத்து சென்றவன் “டேய் உனக்கு என்னடா ஆச்சு …இந்த ஒருவாரமா உன்னோட நடவடிக்கை ஏதும் சரியில்லை…..ஊர்ல இருந்து வந்ததில இருந்தே ஒரு மார்க்கமா சுத்திகிட்டு இருக்க …. கேட்டாலும் பதிலும் இல்லை…அடிக்கடி காணாம போய்டர…இப்போ படத்துக்கு போலாமான்னு கேட்கிற …..உடம்பு ஏதும் சரியில்லையா …இல்லை அப்பா கூட மறுபடியும் சேர்ந்திட்டியா” என அவன் கேட்கவும்
தந்தையின் பெயரை கேட்டதும் அதுவரை உற்சாகமாக இருந்த மனநிலை மாறி முகத்தில் கடுமை ஏற நந்துவின் பிடியில் இருந்து தன் கைகளை விடுவித்தவன் வேகமாக விடுதியை நோக்கி நடந்தான்.
அன்னபறவையாய் அவனுள் இருக்கும்
அவளின் காதலை பிரித்துணர்ந்து
மகிழ்ந்திருக்கும் வேளையில்,
அது காதலல்ல கானல் நீர் என்றதும்
தவித்து போனது நேசம் கொண்ட நெஞ்சம்!
பூக்களின் வாசம் தொடர்ந்து வீசும் .