உணர்ந்திடு பெண்ணே !!
வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி , வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி இப்பொழுது எல்லாம் ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தத்திற்க்கு மிகவும் ஆளாகுகிறார்கள். இது தொடர்பாக ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது . அதில் உள்ள தகவல்களை உங்களிடம் பகிர்கிறேன்.
முன்பு எல்லாம் மன அழுத்தம், மன உளைச்சல் ,மன சோர்வு என்பதெல்லாம் பெரிய பெரிய வேலைகளில் இருப்பவர்களுக்கும் சமுதாய பணிகளில் இருப்பவர்களுக்கும் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இப்போது வீட்டில் இருப்பவர்களும் அதிலும் குறிப்பாக பெண்கள் நூற்றுக்கு என்பது சதவீதம் பேர் இந்த ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தத்தால் பாதிக்க படுகின்றனர்.
இப்பொழுதெல்லாம் முப்பது வயதிற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
மன அழுத்தம் வர காரணம்:
- நீங்கள் விரும்பியது நடக்காமல் போவது
- நடந்த ஒருவிஷியத்தை ஏற்றுகொள்ள முடியாமல் கஷ்டபடுவது.
- தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு அதை அடைய முடியாமல் போவது.
சரி இவற்றை எப்படி சரி செய்வது:
ஆண்/ பெண் இருவரில் யாருக்கு மன அழுத்தம் அதிகம் என பார்த்தால் நிச்சியம் பெண்ணுக்குத்தான் . ஏனெனில் ஆண் மூளையின் சுரபிகள் லாஜிக்காக சிந்திப்பவை. அதனால் அவன் நினைத்ததை அடைந்து விடுகிறான். பெண் மூளையின் சுரபிகள் எமோஷனலாகவும் பீலிங்க்ஸாகவும் சுரப்பவை. பெண்களின் வாழ்க்கை எப்போதும் குடும்பத்தை சுற்றியே இருக்கும்.அவர்களாலே இதை மாற்ற முடியாது.
ஆண் பெண் இருவருக்குமே பிரச்சனைகளும் மன அழுத்தமும் சமம் தான் என்றாலும் பெண்களின் எதிர்பார்ப்பு சுரபிகள் அவர்களின் குடும்பத்தை தாண்டி அவர்களை போக விடாது.
அதனால் ஒரு விஷியத்துகாக ஏங்குவதோ , அது நடக்க வில்லை என்றால் ஏற்றுகொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ, அதற்காக தன் சக்தியையும் மீறி ட்ரை பண்ணிகொண்டிருப்பதை கொஞ்சம் விட்டு விடுங்கள்.
அதாவது ஒன்று அடையுங்கள் அல்லது விட்டு விடுங்கள். முடியாது என்று தெரிந்த பின்னும் அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பது தான் மன அழுத்தம் ஆரம்பிக்கும் இடம்.
உதாரணத்திற்கு உங்களின் கேள்வி என் கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கிறார் என்றால் அதை எப்படி என்னால் ஏற்றுகொள்ள முடியும்?
கண்டிப்பாக ஏற்றுகொள்ள முடியாது தான் . அதற்கு என்ன செய்வது. முதலில் அவரை திருத்த முயற்சி செய்ய வேண்டும். அனைத்து முயற்சிகளும் செய்து உங்கள் கணவர் மாற வில்லை என்றால் அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். ஏற்றுகொள்வதை விட ஏற்று கொள்ளாமல் இருக்கும்போது வரும் மன அழுத்தம் மிக வேதனை நிறைந்தது பெண்களே..
ஏற்று கொண்டால் கணவர் இல்லாவிட்டாலும் வாழ்க்கை இருக்கிறது. ஏற்றுகொள்ளாமல் இருந்தால் கணவனும் இல்லை ,வாழ்க்கையும் இல்லை.
பெண் என்பவள் குடும்பத்தின் ஆணி வேர்.ஆண்கள் இந்த விஷியத்தில் சுத்த வேஸ்ட் .ஆண்கள் பிரச்சனைகளை கண்டால் இடிந்து விடுவார்கள்.ஆனால் பெண்கள் அப்படி அல்ல ..பிரச்சனைகளை அழகாக தூக்கி பிடிக்கும் வல்லமை படைத்தவர்கள். அதில் இருந்து மிக சாதூரியாமாக நீந்தி வந்து விடுவார்கள்.
பெண்மூலையின் சுரபிகள் குடும்பத்தை தாண்டி வேறு எதையும் யோசிக்காது.அதனால் குடும்பத்தின் பிரச்சனைகளை வெறும் பிரச்சனையாக மட்டுமே பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.அந்த பிரச்சனைக்குள் உங்கள் மனதை கொடுத்து கவலையை பரிசாக பெற வேண்டாம்.
விளக்கமாக சொல்கிறேன். யார் ஒருவரும் தன் வாழ்க்கையின் குறிக்கோளில் மற்றொரு மனிதரை முன்னிலைபடுத்தவே கூடாது. அதாவது உங்களது சந்தோஷத்தை அடுத்தவரை கொண்டு நிர்ணயம் செய்யாதீர்கள்.தோழிகளே இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உங்களது குறிக்கோளில் இரண்டாவது நபர் இல்லாத பட்சத்தில் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். நிச்சயம் உங்களுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு இல்லை.
உங்கள் குறிக்கோளில் மற்றொரு நபர் இருக்கும் பட்சத்தில் அது உங்களின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் கெடுக்கும்.
உதாரணமாக என் பையன் முதல் மார்க் வாங்க மாட்டேன்கிறான்.அவன் வாங்கினால் தான் எனக்கு நிம்மதி ..
என் கணவர் உடன் பிறந்தவர்களுக்கு அதிகம் செலவு செய்கிறார். அதை எப்போது நிறுத்துகிறாரோ அப்போது தான் எனக்கு நிம்மதி ..
இந்த விஷியங்களில் எல்லாம் வேறொருவர் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒருவேளை அவர்கள் உங்கள் எதிர்பார்ப்பின்படி நடக்காமல் போய்விட்டால் அது உங்களுக்கு மனவலியை தரும். அதென்ன என் கணவரும் , என் மகனும் வேறு நபர்களா ? என்ற கேள்வி உங்களுக்கு வரும். கண்டிப்பாக கணவராக இருந்தாலும் , மகன் மகளாக இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு இரண்டாவது நபர்தான். அதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் மனதை மட்டும் கொடுத்து விடாதீர்கள்.மனதை கொடுக்காமல் உழைப்பை கொடுக்கும்போது உங்கள் மனம் உறுதியாக இருக்கும். எந்த சோர்வும் அண்டாது.
இது தான் நிரந்திர தீர்வு , நிதர்சனமும் கூட!