இனிய இரவு வணக்கம் தோழமைகளே !
பரபரப்பாக நாள் முழுவதும் இயங்கி கொண்டிருந்த உடல் உறுப்புகள் ஓய்வு எடுக்கும் இந்த இனிய இரவு பொழுதில் சில நினைவுகளை அசைபோடும்போது ஒரு சுகமான இன்பம் தோன்றும். அதுபோன்ற சுகத்தை இந்த பாடலும் நமக்கு கொடுக்கும்.
இந்த பாடல் பற்றிய அதிக அறிமுகம் தேவையில்லை. அனைவரும் அறிந்தது தான் . பாடலின் முதல் வரியே அந்த பாடலுக்கு முகவுரையாக அமைந்திருக்கிறது .
சில பாடல்கள் கேட்கபிடிக்கும். சில பாடல்கள் ரசிக்க பிடிக்கும்….ஒரு சில பாடல்கள் தான் நம் உயிரின் உச்சம் வரை ஓரு சிலிர்ப்பை உண்டாக்கும். எனக்கு இந்த பாடல் அந்த வகையை சார்ந்தது.
இந்த பாடல் செல்லும் திசை எல்லாம் நம் மனதும் செல்லும். காதலியின் மனதின் ஏக்கத்தையும் , காதலின் ஆழத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கும் கண்ணதாசன் the great…..
அதற்கு சிகரம் வைத்தார் போல் சுசீலா அம்மாவின் குரல் வளம் , விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை, , ஸ்ரீதர் எல்லாம் LEGENDSம் இந்த பாடலில் ஒன்றாக இணைந்து ஒரு இசை அமுதத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
வாருங்கள் அதை நாமும் அருந்தி மகிழலாம் .
ஆஆ…அ..ஆ..
நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே வரும்
காற்றினிலும் பெரும் கனவினிலும் நான்
காண்பது உன் முகமே
நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மறப்பதில்லை
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணின்
தூக்கம் பிடிக்கவில்லை – கண்ணின்
தூக்கம் பிடிக்கவில்லை
நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மூடவில்லை
நெஞ்சம் மறப்பதில்லை